தனக்கு பிறக்கவிருக்கும் 3 ஆவது குழந்தையும் பெண்குழந்தை என்று தெரிந்த காரணத்தால் வீட்டில் வைத்து தனது மனைவியின் வயிற்றை அறுத்து கருவை கலைத்துள்ள கணவன்.
கர்நாடக மாநிலத்தில் விஜயாபுரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி அரவிந்த், விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அரவிந்த் தனக்கு ஆண் குழந்தை பிறக்கபோகவதாக உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளார். அதன் பிறகு, வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஸ்கேன் சென்டருக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மனைவியின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிவித்தவுடன் அரவிந்த் மனமுடைந்துள்ளார். மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தையை கலைக்குமாறு மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி மறுத்துவிட்டார். இதன் காரணத்தால், 2 நபர்களை அழைத்து வந்து வீட்டில் இருக்கும் தனது மனைவியின் கருவை கலைக்க முற்பட்டுள்ளார். இதனை எதிர்த்த விஜயலட்சுமியின் வயிற்றை அரவிந்த் மற்றும் 2 நபர்கள் சேர்ந்து கத்தியால் அறுத்து கருவை கலைத்துள்ளனர்.
கத்தியால் கிழித்ததால் விஜயலட்சுமிக்கு ரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து மூவரும் அவ்விடம் விட்டு தப்பி சென்றுள்ளனர். விஜயலட்சுமியின் உயிர் ஊசலாடி கொண்டிருக்க, அக்கம் பக்கத்தினர் இவரை விரைவாக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் விஜயாபுரா புறநகர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அரவிந்த் மற்றும் உடன் இருந்த இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், குழந்தை பிறப்பதற்கு முன்பே எந்த குழந்தை என்பதை கூறுவது சட்டவிரோத செயல் அதன்படி, ஸ்கேன் சென்டரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…