,

இன்றைய நாளில் தொடக்கத்திலேயே உயர்ந்த சென்செக்ஸ் புள்ளிகள் ..! தற்போதைய நிலவரம் என்ன ?

By

பங்குச்சந்தை: வர்த்தக நாளான இன்றைய நாளின் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை (BSE) குறியீடான சென்செக்ஸ் 696.46 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல இந்திய பங்கு சந்தை (NSE) குறியீடான நிஃப்டியும் 22,788 புள்ளிகளுடன் வர்த்தகமானாது.

மக்களவை தேர்தல் வாகு எண்ணிக்கை முடிவடைந்த 2 நாட்களுக்கு பிறகு, நேற்றைய நாளில் நன்கு உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள் இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவை சந்திக்காமல் புள்ளிகள் உயர்ந்தே வர்த்தகம் நடைபெற்றது. தற்போது கூட 2 பங்குசந்தைகளும் எந்த ஒரு சரிவையும் சந்திக்காமல் நீடித்து வருகிறது.

அதன்படி NSE குறியீடான நிஃப்டி 121.80 புள்ளிகள் உயர்ந்து 22,742.15 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரம் BSE குறியீடான சென்செக்ஸ் 186.79 புள்ளிகள் உயர்வை கண்டு 74,569.03 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Dinasuvadu Media @2023