அருண்விஜய்யின் மகனின் மகத்தான செயல்.! குவியும் பாராட்டுகள்.!

அருண் விஜய்யின் மகனான அர்னவ் தன்னிடம் வந்து பசியால் வாடும் அம்மாவிற்கு உணவளிக்க வேண்டும், ஏனெனில் அவளுக்கு குட்டிகள் உள்ளன என்று கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டதாகவும், தனது மகன் இரக்க குணமுடையவனாக வளர்ந்து வருவதில் பெருமிதம் அடைந் துள்ளதாகவும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் அருண் விஜய்யின் மகனான அர்னவ் தன்னிடம் வந்து பசியால் வாடும் அம்மாவிற்கு உணவளிக்க வேண்டும், ஏனெனில் அவளுக்கு குட்டிகள் உள்ளன என்று கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டதாகவும், தனது மகன் இரக்க குணமுடையவனாக வளர்ந்து வருவதில் பெருமிதம் அடைந் துள்ளதாகவும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.