நிதி தராமல் மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது …! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

நிதி தராமல் மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,’கிராம தத்தெடுப்பு திட்டம்’ என, அறிவித்து விட்டு நிதி தராமல் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது .இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும் . பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், அதற்குரிய நிதியை வழங்குவதில்லை என்றும்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Leave a Comment