கிருஷ்ணகிரியில், 3 மாத கர்ப்பிணியை மகளை, தந்தையே சுட்டுக் கொன்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாதையன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவருக்கு வயது 60. இவர் குடிவெறிதனத்தில் அவரது மனைவி மாதவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதை அதிகமான காரணத்தினால் தனது மனைவி மாதவியை சுட்டு கொள்ளப்போவதாக நாட்டு துப்பாக்கியை எடுத்து சுடுவதற்காக முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்த அருணாச்சலத்தின் மகள் வெங்கடலட்சுமி இருவருக்குமிடையே குறுக்கே புகுந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது அருணாச்சலம் தனது மனைவியை சுடுவதற்காக சுட்ட போது வெங்கடலட்சுமியின் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
திருமணமான வெங்கடலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அருணாச்சலத்தை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…