வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி என்னும் இடத்தில் தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதி உள்ளது.இங்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வர்.
கடந்த சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்தது.இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜுன் மாதம் முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்க உள்ளதால் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வரும் 1 தேதி முதல் தடைவிக்கப்பட்டுள்ளது.இதனை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் வெள்ளியங்கிரி மலையில் சூழல் எப்பொழுது வேண்டுமானாலும் மாறும் மேலும் மழை காலங்களில் கடும்குளிர் நிலவும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது.அதனால் இங்கு மழை பெய்யும் எனவே பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும் மலைக்கு செல்லும் கேட்டுகள் எல்லாம் முடப்படும்.இதனை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்று செயல்படும் இதனை மீறி மலைக்கு செல்லும் பக்தர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனால் வரும் 1 தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…