லடாக் எல்லை மோதல்: சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது.. வெளியுறவு துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில், சீன ராணுவம், லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.