குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கிய மத்திய அரசு …!

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல் படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

கடந்த 2019 இல் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.
இதனையடுத்து,குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகள் கடந்த பிப்ரவரியில்,வகுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவைகளுக்கு ஏப்ரல் 9 முதல் ஜூலை 9 வரை கால அவகாசம் வழங்கியதாக ராய் தெரிவித்தார்.
இதற்கிடையில்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,குடியுரிமை திருத்த சட்ட விதிகள் இன்னும் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்றும், கொரோனா தடுப்பூசி முடிந்ததும் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில்,குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ்,இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தற்போது மத்திய அரசு தொடங்கியுள்ளது. மேலும்,குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அதன்படி,சத்தீஸ்கார்,குஜராத், ராஜஸ்தான்,அரியானா மற்றும் பஞ்சாபில் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான்,வங்காள தேசம்  மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் தஞ்சம் புகுபவர்களுக்கு சில குறிப்பிட்ட விதிகளின் கீழ் குடியுரிமை வழங்கப்படும்.அவ்வாறு,குடியுரிமை பெறுவதற்கு முன்னால்,தஞ்சம் புகுந்துள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவில் தங்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

Recent Posts

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

60 mins ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

9 hours ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

10 hours ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

10 hours ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

13 hours ago