இந்திய வான்வெளியை பயன்படுத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறை பயணமாக இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக இலங்கைக்கு முதன் முறையாக செல்ல உள்ளார். இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்தி செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரெஷி மற்றும் தொழிலதிபர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து உள்ளார். இவர்களது சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்காத நிலையில், இம்ரான் கானுக்கு தற்போது இந்தியா அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…