Chhattisgarh cow

கதறி அழுத கன்றுக்குட்டி…காரால் நசுக்கி கொலை செய்த கொடூரன்!

By

சத்தீஸ்கர் : பிலாஸ்பூரில் பசுக் கன்று ஒன்றை  வேண்டுமென்றே காரால் ஒருவர் நசுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஷாஹித் என்ற நபர் தன்னுடைய காரை வைத்து கன்றுக்குட்டியை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. வேண்டுமென்றே காரை வைத்து பின்னோக்கி கன்றுக்குட்டியை கொலை செய்து இருக்கிறார்.

சிசிடிவியில் பதிவான வீடியோவின் படி, கார் பின்னோக்கி நகர்ந்தபோது, ​​கன்று சோகத்தில் அலறியது. அருகில் இருந்த பசுக்கள், கன்றுக்குட்டியின் தாய் மற்றும் பிற பசுக்கள், அழுகையை கேட்டு பின் சென்றது. இருப்பினும், அந்த கொடூர மனசு கொண்ட நபர் கன்று குட்டியை கார் ஏற்றி நசுக்கி கொன்றார்.


இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், வீடியோவை தற்போது வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. வீடியோவை, பார்த்த பலரும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்து அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் எதிர்காலத்தில் வேறொருவரின் உயிரைப் பறிக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

மேலும், சிலர் ஐயோ, இதைப் பார்த்து தாய் பசு எப்படி வேதனையடைந்தது. ஏன் இவ்வளவு வெறுப்பு. இந்த நாயை உடனடியாக கைது செய்யுமாறு சத்தீஸ்கர் காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன் என கூறியும் வருகிறார்கள். இன்னும் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023