குடிக்க பணம் தராததால், குடிவெறியில் தாயின் தலையை துண்டித்த கொடூரன்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொல்லப்பூர் எனும் கிராமத்தை சேர்ந்த 65 வயதான சந்திரம்மாவின் மகன்தான் ராமுடு. இவருக்கு குருமூர்த்தி என்ற சகோதரரும் உள்ள நிலையில், ராமுடு அதிக அளவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அவருக்கு திருமணம் ஆன பிறகு அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவர் மது அருந்துவதற்காக தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டே வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயிடம் வழக்கம்போல குடிப்பதற்காக பணம் கேட்ட பொழுது அவரது தாய் தர மறுத்ததால் கடும் கோபமடைந்த ராமுடு வீட்டில் இருந்த அரிவாளால் அவரை வெட்டியுள்ளார். பின் தலையை துண்டித்து தலையை அங்குள்ள புதரில் வீசி விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.அடுத்த நாள் காலை 7 மணி அளவில் அவரது சகோதரன் குருமூர்த்தி வந்து தாயைப் பார்த்த பொழுது தலை இன்றி தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கொலை செய்தது யார்? தலை எங்கு போனது என குழம்பிப் போயுள்ளார்.
இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் தனது தம்பியை காணவில்லை எனவும் அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட சந்திரம்மாவின் தலையை தேடியுள்ளனர். அப்பொழுது அவரது வீட்டின் அருகில் இருந்த புதருக்குள் தலை கிடந்ததை கண்டு போலீசார் அதனை எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவரை கொலை செய்தது அவரது இளைய மகன் ராமுடு தான் என்பதை கண்டறிந்தனர். பின் தலைமறைவாக இருந்த ராமுடுவை போலீசார் கைது செய்துள்ளதுடன் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…