14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..!

தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை 14 வயது சிறுவன் ஒருவன் காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் 10 வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது காதல் செய்துவந்துள்ளனர். அதன் பிறகு அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்த அந்த சிறுவன், சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

சிறுமி கர்ப்பமாக்கியது தெரிந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரணை செய்ததில் குற்றத்தை சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சிறுவனை கொண்டு சென்றுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.