#RIPBhavatharini: தேனி வந்தது பாடகி பவதாரிணி உடல்!

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி   (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார்.

இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான  பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இளையராஜா மகள் மறைவு: இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

இதனையடுத்து, அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில்  நேற்று வைக்கப்பட்டு இருந்த நிலையில், கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி,  சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.

அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் வைக்கப்பட்டு இருந்த பவதாரணியின் உடல் இன்று தேனி வந்தது. பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவருடைய உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அவரது உடல் தேனி வந்தது. 12 மணிக்கு மேல் இறுதிச்சடங்கு நடக்கிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment