ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் அல்ல.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.!

இந்த இடைத்தேர்தல்  பிரதமர் மோடிக்கான தேர்தல் அல்ல.  எங்களுக்கான (பாஜக) தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார்.

அதே போல, அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் தமாகா போட்டியிட்டு தோல்வியுற்றதால், இந்த முறை  அக்கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிவிட்டது. அதனால், அதிமுகவே நேரடியாக களமிறங்க உள்ளது. அதிலும், இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு பிரிவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் எந்த தரப்பு அதிமுக சார்பாக போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதே போல, அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக இந்த தேர்தலில் அதிமுக தான் போட்டியிடும். அதற்கு ஆதரவு தருகிறோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், இந்த இடைத்தேர்தலில் பாஜக பலம் பற்றி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. ஜனவரி 31ஆம் தேதி வரையில் எங்களுக்கு நேரம் இருக்கிறது. எங்களை பொறுத்த வரையில் இந்த தேர்தலில்  திமுகவை எதிர்த்து ஒரு பலமான போட்டியாளர் களமிறங்க வேண்டும். என குறிப்பிட்டார்.

மேலும், இது எங்களுக்கான (பாஜக) பல பரீட்சை அல்ல.  இந்த தொகுதியில் அதிமுக பெரிய கட்சி. இதற்கு முன்னர் இங்கு வென்றவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இந்த தேர்தல்  பிரதமர் மோடிக்கான தேர்தல் அல்ல.  எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான். அங்கு எங்கள் பலத்தை நிரூபிப்போம். கடந்த 10 ஆண்டுகால ஆட்சி பற்றி மக்கள் முடிவெடுப்பார்கள்.  என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

மக்களே உஷார்.! இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம்..!

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…

4 mins ago

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

24 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

51 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

58 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

1 hour ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

1 hour ago