முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பல்வேறு பிரபலங்கள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவி செய்துள்ளனர்.
இதுவரையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிவாரண நிதியிலிருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை வாங்க முதற்கட்டமாக ரூ.50 கோடியம், ஆர்.டி.பி.சி.ஆர் ஹிட்களை வாங்க ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…