இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்கு 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக இந்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டு நேற்றிலிருந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பெயரில் யாரேனும் தென்பட்டாலோ, அதேபோல் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தென்பட்டாலோ போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், தமிழக முக்கிய புண்ணிய ஸ்தலங்கள், என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக லக்னோ மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிவிரைவு படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு, உள்ளே செல்லும் பக்தர்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…