காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இடைக்கால மனு!

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு கர்நாடக அரசுக்கு தடை செய்யக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுதாக்கல் செய்துள்ளது. காவிரியிலிருந்து பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கர்நாடக அரசு நீர் எடுத்து வருவது மற்றும் மற்ற தொழிற்சாலை தேவைகளுக்காகவும் காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் காவிரியிலிருந்து நீர் எடுக்க தடை செய்ய வேண்டும் என கர்நாடக அரசுக்கு எதிராக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு காவிரி நீரை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க உத்தரவிடக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment