தொடங்கியது யானைகள் புத்துணர்வு முகாம்…!!! ரிப்பன் வெட்டி துவக்கிவைப்பு…!!!

  • அனைவரும் எதிர்பார்த்த யானைகள் புத்துணர்வு முகாம் இனிதே துவங்கியது.
  • கோவில் யானைகள் குதூகலமாக பங்கேற்ப்பு.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகள்  நலவாழ்வு புத்துணர்வு முகாமை தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத்துறை, ஒவ்வொரு ஆண்டும்நடத்தி வருகிறது. இந்த புத்துணர்வு முகாமை முதன்முதலில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு அது தற்போதுவரை நடைமுறைபடுத்தி வருகிறது.

 

Image result for யானைகள் புத்துணர்வு முகாம்

இதன் விளைவாக மேட்டுப்பாளையம்  தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம்,தமிழ்நாடு  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த முகாம்  48 நாட்கள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் இன்று(டிச.,15) காலை  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களால் ரிப்பன் வெட்டி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த  முகாமில் 26 யானைகள் பங்கேற்றுள்ளன.

author avatar
Kaliraj