சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இசைவாணி.! நேரில் அழைத்து வாழ்த்திய இசைஞானி இளையராஜா.!

உலகின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த கானா பாடகியான இசைவாணியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவாற்றல், படைப்பாற்றல்,தலைமைத்துவம் , அடையாளம் ஆகிய பிரிவுகளின் கீழ் சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக பிரபல ஊடகமான பிபிசி உலகின் சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு சிறந்த பெண்களுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டது . அந்த வகையில் பிபிசி வெளியிட்ட உலகின் சிறந்த பெண்களுக்கான பட்டியலில் இடம்பெற்ற 100 … Read more

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்.!

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார். இளையராஜா தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புக ளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார். ஆனால் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய உரிமையாளர் சாய் பிரசாத் அந்த இடத்தை விட்டு இளையராஜாவை காலி செய்ய கூறினார். பின்பு இளையராஜா தரப்பு மறுப்பு தெரிவித்து, இளையராஜா நீதிமன்றத்தில்  வழக்கு  தொடர்ந்தார், மேலும் இளையராஜா தொடர்ந்த … Read more

பேச்சுவார்த்தை தோல்வி ! இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது,இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று  சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தின் பாடலை வெளியிட்ட வெற்றிமாறன்

பிசாசு திரைப்படத்தின் இயக்குனரான மிஸ்கின்  இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் “சைக்கோ”.இந்த திரைப்படம் த்ரில்லர் திரைப்படமாக தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கிறார். மேலும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.