இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வடிவாசலுக்கு தயாராகும் சூர்யா.!

சூர்யாவின் அலுவலகத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை 23- ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சூர்யாவின் அலுவலகத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் சூர்யா காளையுடன்  பயணித்து வருகிறார். இரண்டு காளைகளில் எந்த காளை சரியாக உள்ளதோ அந்த காளை படத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.