Sterlite: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தினர். ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு விவாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மேல் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறுகையில்” மீண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விதி மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. தொடர் விதிமீறல், பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே, நாட்டின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் பங்களிப்பு செய்தாலும், மக்களின் நல்வாழ்வு அதிக முக்கியத்துவம் வேண்டும். உள்ளூர் மக்கள் நலனை பாதுகாப்பதில் மாநில அரசுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்புமீறல் இருந்ததாக கருதவில்லை. உயர்நீதிமன்ற முடிவில் தலையிட விரும்பவில்லை. ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது” என தெரிவித்தது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. கடந்த முறை ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையின் போது நிபுணர் குழு அமைத்து ஆலையை திறப்பது பற்றி ஆய்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் யோசனை வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…