சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சின்னக்கண்ணு என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 28 ஆம் தேதி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் சின்னக்கண்ணு நேற்று அதிகாலை உயிரிழந்தார்.எஸ்.ஐ சின்னக்கண்ணுவின் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தின் சேனூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதேப்போன்று,சென்னை ஆயுதப்படை தலைமை காவலராக பணியாற்றி வந்த கமலநாதன் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.அதன்பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை கமலநாதன் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த சின்னக்கண்ணு மற்றும் கமலநாதன் ஆகிய இருவருக்கும் காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…