“அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீடிக்கப்படுகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் வேளாண் கூட்டுறவு கடன் தொகையை விவசாயிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.