பொது விடுமுறையை முன்னிட்டு பங்குச் சந்தைகள் மூடல்.!

பொது விடுமுறையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகள் மூடப்பட்டுள்ளது .

நாளை முதல் மீண்டும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கப்படும் .தீபாவளி தினத்தன்று நடைபெற்ற வர்த்தகம் நாட்டின் ஒரு சில பெரிய நிறுவனங்களின் வருவாய் , விரைவான பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது .

மேலும் வெள்ளிக்கிழமை, தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 12,719,95 புள்ளிகளுடன் , தேசிய பங்குச் சந்தையில் 0.2 % உயர்ந்து 43,443 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 10 ஆண்டு பெஞ்ச்மார்க் பத்திர ஈல்டின் மதிப்பு 5.879 சதவீதமாக ஆக இருந்தது.மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74.6 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

Leave a Comment