இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஒரு சில மாற்றுத்திறனாளிகள் இருப்பிடம் மாறி வசிப்பதாகவும், அவர்கள் நிவாரணம் பெறுவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், மாவட்ட ஆட்சியர்களுக்கும்கடிதம் அனுப்பியுள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…