மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை!!

சுவாமி விவேகானந்தரின் சிலை மெக்சிகோவில் நிறுவப்பட்டது.

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் முதல் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று(செப் 3) திறந்து வைத்தார்.

“இந்தச் சிலை மக்களுக்கு உத்வேகமாக இருக்கும், குறிப்பாக இப்பகுதியின் இளைஞர்கள் தங்கள் நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார்.

மேலும் “மனிதகுலத்திற்கான சுவாமி விவேகானந்தரின் செய்தி மற்றும் போதனைகள் மிக முக்கியமான ஒன்று. மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைப்பதன் மூலம், அவருக்கு எங்களது பணிவான அஞ்சலிகளை செலுத்துகிறோம்” என்றும் கூறினார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment