இலங்கை அரசு,மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளுக்குள், பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளை இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி,முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பணியை இலங்கை கடற்படையினர் ரோந்து மூலம்,தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில்,தமிழ்நாட்டில் நாளையுடன் மீன்பிடி தடைகாலம் முடிவதால்,கடற்பகுதியில் இலங்கை அரசு பழைய பேருந்துகளை கடலுக்குள் போட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது எனவும்,மீன்களின் இனப்பெருக்கத்திற்கு என்று இலங்கை அரசு சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை எனவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கச்சத்தீவு கடற்பகுதியில் பழைய பேருந்துகளை கடலில் இறக்குவதால்,அவற்றில் மீனவர்களின் வலைகள் சிக்கி சேதமடைவதுடன்,படகுகள் மோதும் ஆபத்தும் உள்ளதாக தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே கச்சத்தீவு கடற்பகுதியில் பழைய பேருந்துகளை இறக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிறுத்த மத்திய,மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…