ராமேஸ்வரத்தில் இருந்து இன்று 80 பேர் கச்சத்தீவு பயணம்-இரவு பேச்சுவார்த்தை!

கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 80 பக்தர்கள் இன்று கச்சத்தீவு செல்கின்றனர்.3 விசைப்படகுகள்,ஒரு நாட்டுப் படகில் இன்று காலை 9 மணிக்கு 80 பேரும் உரிய பாதுகாப்புடன் கச்சத்தீவு பயணம் மேற்கொள்கின்றனர். கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதன்படி, அந்தோணியார் உருவம் பொறித்த கொடியேற்றப்படவுள்ளது. அதன் பின்னர்,சிலுவைப்பாதை திருப்பலை மற்றும் அந்தோணியார் தேர்பவனி நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து,நாளை காலை 7 மணிக்கு திருப்பலி … Read more

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் பொழுது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த வாரம் கூட பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதலில் உயிர் இழப்புகள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என இலங்கை … Read more

கச்சத்தீவு பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இறக்கும் இலங்கை அரசு;தமிழக மீனவர்கள் கண்டனம்…!

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக,கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இலங்கை அரசு இறக்கி வருகிறது. இதனால்,தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசு,மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளுக்குள், பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளை இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி,முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பணியை இலங்கை கடற்படையினர் … Read more