பேசாத ஹீரோவெல்லாம் ஜாஸ்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க ! எனக்கு ஒன்னும் புரியல ! விஜய் மறைமுகமாக தாக்கி பேசிய முன்னணி இயக்குநர் !

விஜய் நடிப்பில் விரைவில் “பிகில்” படம்  தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தின் இசை  வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.அந்த நிகழ்வில் விஜய் அரசியல் மற்றும் சுப ஸ்ரீ மரணம் ,பேனர் கலாசாரம் மற்றும் பல விஷயங்களை பற்றி அசத்தலாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இவர் இசை வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக பலர் இவருடைய பேச்சிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு படத்தின் இசை வெளியிட்டு விழாவின் பேசிய இயக்குநர் ஆர்.வி உதய குமார் பேசினார்.

மேலும் ” பேசாத ஹீரோக்கள் எல்லாம் மேடையில் ஜாஸ்தி பேச ஆரம்பிச்சிடாங்க.எனக்கு ஒன்னும் புரியல.அமைதியா இருப்பாரேப்பா ..இப்ப ஜாஸ்திபேசுறாரே.. ஏதோவிசயம் இருக்கு காரணம் ஒன்னும் புரியல என்றும் அவர் கூறியுள்ளார். டைட்டிலை முதலில் தமிழ்ல வைங்கப்பா.அது தமிழ் வார்த்தையிலே இல்லை ” என்று  அவர் பிகில் படத்தின் பெயரை குறிப்பிடாமல் விமர்ச்சித்துள்ளார்.