பல்வேறு திருட்டில் ஈடுபட்ட பலே திருடனை தனிப்படை அமைத்து பிடித்த வட சென்னை எம்.கே.பி நகர் காவல்துறை….

சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு மருந்து கடை ஒன்றில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது, பல்வேறு இடங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை செய்ததாக காவல்துறையினரின் விசாரணையில் லொட்டை மதன் என்ற திருடன் ஒப்புக்கொண்டுள்ளான். வடசென்னையின் பிரதான  பகுதிகளான புளியந்தோப்பு, எம்.கே.பி நகர், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது போன்ற தொடர் திருட்டு சம்பவங்கள்  நடைபெற்று வந்தவன்னம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்.கே.பி நகர் காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார் அவர்கள், தனிப்படை ஒன்றை அமைத்து குற்றம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை வைத்து அந்த குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சென்னை ஓட்டேரி  சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மதன் என்கிற லொட்டை மதனை (19) தனிப்படை காவல்துறையினர்  கையும் களவுமாக பிடித்தனர். காவலர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில்,  பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, எம்கேபி நக,ர் வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது திருட்டை அரங்கேற்றியுள்ளதாக ஒப்புக்கொண்டார். இந்த திருட்டுகளை தனியாகவும் தன், நண்பர்களோடும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் தாக்கியும் செல்போன் மற்றும் பணத்தை பறித்து வந்ததது தெரிய வந்தது. அதேபோல சென்னை வியாசர்பாடியில் உள்ள மருந்து கடை ஒன்றின்  பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை அவர்  செய்ததாக விசாரணையில் லொட்டை மதன் ஒப்புக்கொண்டார்.

மேலும், இவர் மீது வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவரிடமிருந்து உயர் ரக திருட்டு இருசக்கர வாகனம், மூன்று கத்திகள், பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் ரொக்கப்பணம் 7 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.மேலும் இவருக்கு திருட்டில் உதவிய லொட்டை மதனின்  நண்பரான இட்டா விஜய் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Kaliraj

Recent Posts

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

3 mins ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

18 mins ago

ரீ ரிலீஸான தீனா…திரையரங்கிற்குள் பட்டாசு கொளுத்திய அஜித் ரசிகர்கள்!

Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…

31 mins ago

அவர் கூட என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கு! கடுப்பான சிவம் துபே!

Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…

48 mins ago

மோடி புகைப்படம் இல்லை.! கூட்டணி தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்த பாஜக தலைவர்.?

Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…

50 mins ago

புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் !! டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவுப்பு !

Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…

1 hour ago