துப்பாக்கியால் நடந்த விபரீதம்… உறவினரை சுட்டுக்கொன்ற சிவா..?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நண்பரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன், இவர் நேற்று நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யபட்டார், இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கமலக்கண்ணனுடன் வேட்டைக்கு சென்ற அவரது நண்பர் மற்றும் உறவினர் சிவா என்பவர் காவல்துறையில் சரண் அடைந்தார்.

மேலும் அதனைப்பிறகு பின்னர் போலீசார் சிவாவிடம் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் சிவா கூறியது “நானும் கமலக்கண்ணனும் மாமன் மச்சான் உறவு, நங்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக துப்பாக்கி வேட்டைக்கு ஒன்றாக சென்று வருகிறோம், மேலும் நாங்கள் வைத்திருக்கும் அந்த நாட்டு துப்பாக்கி என்னுடையது அதை கமலக்கண்ணன் வேறுறொருவருக்கு பணித்திற்காக விற்றுவிட்டார்.

இதனால் எனக்கும் கமலக்கண்ணணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது, மேலும் நான் பொது இடத்தில் நிற்கும்பொழுதே எனக்கும் எனது மாமியாருக்கும் இடையே தொடர்புள்ளது என்று பேசினார், எனது மனைவியையும் அடித்தார், இதனால் எனக்கும் கமலக்கண்ணனுக்கும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே வந்தது.

நேற்று இரவு நானும் கமலக்கண்ணனும் வழக்கம்போல் காட்டிற்கு வேட்டையாட சென்றோம் அப்பொழுது எனக்கு அனைத்தும் நியாபகம் வந்து முன்விரோதம் காரணமாக கமலக்கண்ணணை சுட்டுக்கொன்று விட்டேன் என்று சிவா கூறியுள்ளார், இதனை கேட்ட போலீசார் உடனடியாக சிவாவை சிறையில் அடைத்தனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.