ஜூன் 1 முதல் வழிபாடு தலங்கள் திறக்கப்படும்- முதல்வர்!

மேற்குவங்கத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாடு தளங்களை திறக்க அம்மாநில முதல்வர் அறிவித்தார்.

மேற்குவங்கம் மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, அம்மாநிலத்தில் சில தளவுகளை அளித்துள்ளது. அதில், ஜூன் 1ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

கோவில்களில் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கூறினார். மேலும், மேற்குவங்கத்தில் ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.