அதிர்ச்சி சம்பவம் : மணிரத்னம் மீது வழக்குப்பதிவு.! என்னவாகும் ‘பொன்னியின் செல்வன்’.?

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்துள்ளதால் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு. 

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அதன் பின்னர் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்தபோது சிறு விபத்து ஏற்பட்டதாகவும் அதில், குதிரை ஒன்று உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் பீட்டா அமைப்பு புகார் அளித்துள்ளது. மேலும், இதனால்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் விலங்குகள் நல வாரியம் மணிரத்னத்தை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் படப்பிடிப்பு நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.