பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் “பதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புப் விறு விறுப்பாக முழுவேகத்தில் நடந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா போன்ற பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் தத்லானி, சேகர் ரவ்ஜியானி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.
இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டுக்கு பிறகு ஷாருக் கான் நடிப்பில் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக “ஜீரோ” படம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து, இதனால் ” பதான்’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஷாருக்கான் சினிமாவிற்கு வந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் பதான் படத்தின் (GLIMPSE)-ஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.
வீடியோவில் ஷாருக்கான் மிரட்டலான கொடூர லுக்கில் கையில் துப்பாக்கியுடன் வருகிறார். அதில் வரும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக ஈர்தது என்றே கூறலாம். இதற்கிடையில், ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திழும் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…