சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்.. முதலீட்டார்கள் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது!

சென்செக்ஸ், நிப்டி சாதனை உச்சத்தை எட்டியதால், முதலீட்டாளர்களின் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது.

இந்திய சந்தையில் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு இன்று ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டிய பிறகு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது.

பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதலீடு மதிப்பு இன்று ரூ.260.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய அமர்வில் ரூ.259.68 லட்சம் கோடியாக இருந்தது. சென்செக்ஸ் 58,908 என்ற உச்சத்தை தொட்ட பிறகு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்தது. நிப்டி 17,576 என்ற சாதனை உச்சத்தை எட்டியது.

பிஎஸ்இ மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 124 புள்ளிகள் மற்றும் 37 புள்ளிகள் உயர்ந்தன. நீண்ட காலமாக தற்காப்பு பங்காகக் கருதப்படும் ஐடிசி பங்கு 7.45% உயர்ந்து, ரூ.232.10 ஆக, சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் உள்ளது.

மற்ற சென்செக்ஸ் லபாகங்களில் இண்டஸ்இண்ட் வங்கி (8.55%), பஜாஜ் ஆட்டோ (1.34%) மற்றும் SBI (1.49%) ஆகவும் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சென்செக்ஸ் 23.24% அல்லது 11,098 புள்ளிகளும், நிஃப்டி 25.58% அல்லது 3,576 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.

ஒரு வருடத்தில், சென்செக்ஸ் 49.72% அல்லது 19,541 புள்ளிகளை அதிகரித்துள்ளது. நிஃப்டி 51.29% அல்லது 5,952 புள்ளிகளின் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத சந்தை சரிவுக்குப் பிறகு முதலீட்டாளர்களின் லாபம் 155.54% அல்லது ரூ.158.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் 23, 2020 அன்று, பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று ரூ.247.32 லட்சம் கோடியாக இருந்த ரூ.101.86 லட்சம் கோடியாக குறைந்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை மிக உயர்ந்த இழப்புகளை சந்தித்த பிறகு சந்தை மூலதனத்தின் வீழ்ச்சி ஏற்பட்டது.

சென்செக்ஸ் 3,934 புள்ளிகளை இழந்து 25,981 ஆகவும், நிப்டி 1,135 புள்ளிகள் குறைந்து 7,610 ஆகவும் முடிந்தது. கடந்த ஆண்டு மார்ச் 23 முதல், சென்செக்ஸ் 32,927 புள்ளிகள் அல்லது 126.73% அதிகரித்துள்ளது. இதேபோல், நிஃப்டி 130.95% அல்லது 9,966 புள்ளிகள் என்ற சாதனை உயர்வை அடைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு எண் 417.96 (0.71%) புள்ளிகள் உயர்ந்து, 59,141.16 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு 110.05 (0.63%) புள்ளிகள் உயர்ந்து, 17,629.50 புள்ளிகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.! மாத தொடக்க நாளில் சரிவு.!

Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

9 mins ago

பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…

46 mins ago

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…

47 mins ago

விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.! 3 பேர் உடல் சிதறி பலி.!

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…

54 mins ago

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

1 hour ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

4 hours ago