காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் பறிமுதல்..!

காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர். இந்த சமயத்தில் இன்று காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். அதனை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த ஆயுதங்களில் 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 12 ஏ.கே. மேகசின்ஸ், 358 துப்பாக்கி குண்டுகள், 2 கை துப்பாக்கிகள், கை துப்பாக்கிகளின் மேகசின்ஸ் மற்றும் 6 கையெறி குண்டுகள் ஆகியவை பாதுகாப்பு படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.