சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானம் மூலம் விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 அதிகாரிகள், தூத்துக்குடி புறப்பட்டன நிலையில், இன்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தடைந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவையை விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் ஒப்படைத்தார்.