சாத்தான்குளம் கொலை வழக்கு: வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானம் மூலம் விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 அதிகாரிகள், தூத்துக்குடி புறப்பட்டன நிலையில், இன்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தடைந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவையை விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் ஒப்படைத்தார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.