யார் மனதையும் புண்படுத்த அல்ல! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்தானம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தது மிக்பெரிய சர்ச்சையானது.  அந்த வீடியோவில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இடம்பெற்று இருக்கும் “சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ ” என்ற வசனம் கொண்ட ஆடியோவை வைத்து நா அந்த ராமாமி இல்ல டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியீட்டு இருந்தார்.

வீடியோவை பார்த்த பலரும் பெரியாரை விமர்சித்து இந்த வீடியோவை சந்தானம் வெளியீட்டு இருக்கிறார் என கூறி விமர்சித்தனர். இந்நிலையில்,  வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

நான் அந்த ராமசாமி இல்ல! சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!

அதன் ஒரு பகுதியாக படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  அதில் நடிகர் சந்தானம் மற்றும் படத்தில் நடித்த பிரபலங்கள் எல்லாரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய நடிகர் சந்தானம் ” வடக்குப்பட்டி ராமசாமி படம் யார் மனதையும் புண்படுத்த அல்ல என பொங்கல் வாழ்த்து வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.

இது குறித்து பேசிய சந்தானம் ” படத்தில் ஒரு விஷயம் சமீபத்தில் சர்ச்சையானது. அந்த சர்ச்சையை கேட்டவுடன் தயாரிப்பாளர் என்னிடம் பேசினார். பின் நான் அவரிடம் பயப்படவேண்டாம் படத்தின் ப்ரோமோஷனுக்கு உதவும் என கூறினேன்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் எந்த தவறான விஷயமும் கிடையாது. ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம். யார் மனதையும் புண்படுத்த அல்ல. படத்தில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கான விளக்கத்தை நான் கொடுக்க நினைக்கிறன். படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி கவுண்டமணி சாருடைய தீவிரமான ரசிகர்.

நானும் கவுண்டமணியுடைய ரசிகன்  தான். இதற்கு முன்னதாக என்னுடைய நடிப்பில் வெளியான படங்களில் கூட சில கவுண்டமணி வசனங்கள் இடம்பெற்று இருக்கும். டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு ஒரு ஹிட் படம் தேவைப்படுகிறது. கண்டிப்பாக இந்த படம் எனக்கு அமையும் என்று நான் நினைக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment