புடின் விரைவில் தனது நெருங்கிய நண்பர்களால் கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் பேச்சு.
உக்ரைன் போர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த வருடம் பிப்ரவரி 24-ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த போரில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் பல சேதங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த போரினால் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்தன. மேலும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், ஆயுதங்களையும் வழங்கி வருகின்றனர். மேலும், அவ்வப்போது ரஷ்ய அதிபர் புடின் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
புடின் நெருங்கிய நண்பர்களால் கொல்லப்படுவார்
இதனை எடுத்து உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, உக்ரைன் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேசிய உக்ரைன் அதிபர், புதின் தற்போது பலவீனமாகி வருகிறார். அவர் விரைவில் தனது நெருங்கிய நண்பர்களால் கொல்லப்படுவார் என கூறியதாக செய்திகள் வெளியாகி வருகிறது. உக்ரைன் அதிபரின் இந்த பேச்சு முக்கியமானதாக கருதப்படுகிறது.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…