கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ரஷ்யா நாட்டில் உள்ள காமலேயா எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மனிதர்களுக்கு பரிசோதனை செய்து நிறைவு செய்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசிகளை அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.
அந்த தடுப்பூசியை தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலகின் முதல் தடுப்பூசி எனக் கூறும் “ஸ்பூட்னிக் வி” உற்பத்தியை ரஷ்யா தொடங்கிவிட்டதாகவும், இந்த மாத இறுதியில் சந்தைக்கு வரவுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியை மாஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒன்றிணைப்புடன் இணைந்து உருவாக்கியுள்ளது. மனிதர்கள் மீது நடத்தப்படும் இறுதிகட்ட சோதனைக்கு முன்பாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி. இதற்கு எதற்காக ஸ்பூட்னிக்-வி என பெயர் வைத்தார்கள் என கேள்வி எழுந்தது. அதன் காரணத்தை அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 1957இல் சோவியத் யூனியன் பிரிந்ததற்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு, விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் தான் ஸ்பூட்னிக்.
சோவியத் யூனியனால் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் இதுவாகும் ஸ்பூட்னிக் என்றால் சக மனிதன் என்பது பொருள். ஆனால், அது நாளடைவில் ஸ்பூட்னிக் என்றால் செயற்கைகோள் எனும் அர்த்தம் கொள்ளும் ரஷ்யாவில் பிரபலமானது. அதனால் தான் கொரோனா தடுப்பூசிக்கும் இதே பெயரை அரசு வைத்துள்ளது என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…