ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி…!

அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி … Read more

இந்தியாவில் அடுத்த வருட தொடக்கத்தில் 100 மில்லியன் டோஸ் தயாரிக்கப்படும் – ரஷ்யா

இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹெட்டிரோ, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வருடத்திற்கு 100 மில்லியன் டோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) ஒரு அறிக்கையில் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி … Read more

#Breaking: ரஷ்யாவின் “ஸ்புட்னிக் V” தடுப்பூசி 92% வெற்றி.!

ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” என்ற கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனை முடிவுகளின்படி, கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92% வெற்றி பெற்றுள்ளது என்று ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “ஸ்புட்னிக் வி” அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசி ஆகும். இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து ஆகஸ்ட் 11 அன்று பதிவு செய்யப்பட்டது. தற்போது, இந்த ‘ஸ்பூட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனையின்படி, கொரோனாவிலிருந்து … Read more

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உள்ள டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வகத்தில் தயாரிக்க ஒப்பந்தம்!

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்- V கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வகத்தில் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா நாடு கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் வெற்றிபெற்றது. இந்தநிலையில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்- V கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. அதன்படி, ரஷ்யாவின் … Read more

Sputnik V தடுப்பூசி தயாரிப்பை தொடங்கிய ரஷ்யா.!

கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரஷ்யா நாட்டில் உள்ள காமலேயா எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மனிதர்களுக்கு பரிசோதனை செய்து நிறைவு செய்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசிகளை அக்டோபர் … Read more