CSK ஆறுச்சாமிக்காக வருத்தப்பட்ட ரோஹித் சர்மா.! இந்த விஷயம் சுத்தமா பிடிக்கல..!!

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை பற்றி பேசி இருக்கிறார்.

ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதிப்படி, ஒரு போட்டிக்கு முன் 11 வீரர்களுடன் கூடுதலாக ஐந்து மாற்று வீரர்களின் பெயர்களை டாஸ் போடும் பொழுது அறிவிக்க வேண்டும். அதன் பிறகு விளையாடும் பொழுது ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரராக அதாவது (இம்பாக்ட் ப்ளேயர் விதிப்படி) அணியில் இடம்பெற வைத்து விளையாடலாம்.

இந்த விதிப்படி சென்னை அணியின் ஆறுச்சாமி ஷுவம் துபே பேட்டிங் மட்டுமே களமிறங்கி சிக்ஸர்கள் அடித்து விட்டு தனது பேட்டிங் நிறைவு செய்ததும் இந்த இம்பாக்ட் வீரர் விதியின் படி வெளியில் உக்காருவார் அவருக்கு பதிலாக ஒரு பவுலர் அணியில் இடம்பெறுவார். ஆனால், சிவம் துபே ஒரு ஆல் ரவுண்டர் வீரர் ஆவர். இந்த இம்பாக்ட் வீரர் விதிப்படி அவரது பந்து வீச்சு பாதிக்கப்படுகிறது என கூறலாம்.

இதை சுட்டி காட்டி மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா இந்த இம்பாக்ட் ப்ளேயர் விதியை பற்றி ‘கிளப் ப்ரேரி ஃபயர்’ (Club Prairie Fire) என்ற போட்காஸ்டில் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “இந்த இம்பாக்ட் ப்ளேயர் (Impact Player) விதியை ரசிக்க மாட்டேன், அதற்கு நான் ஒரு ரசிகனும் இல்லை, இது எனக்கு பிடிக்கவும் இல்லை மேலும், இந்த விதியால் பல ஆல் ரவுண்டர் வீரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறலாம்.

முக்கியமாக சென்னை அணியின் சிவம் துபே மற்றும் ஹைதரபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிக சிறந்த ஆல் ரவுண்டர் வீரர்கள் ஆவார்கள். ஆனால், இந்த இம்பாக்ட் ப்ளேயர் விதியின் படி இருவருக்கும் பந்து வீச வாய்ப்பு கிடைத்ததில்லை. நீங்கள் இந்த இம்பாக்ட் ப்ளேயர் விதியை ஒரு பொழுது போக்கிற்காக பார்த்தால் அது ஓகே தான். ஆனால் இதுவே ஒரு சர்வேதச போட்டிகளில் ஆல் ரவுண்டர் வீரருக்கு இது நல்லதாக அமையாது”, என ரோஹித் சர்மா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

முதலில் அனுமதி வாங்குங்க இல்லனா நீக்குங்க! ரஜினியின் ‘கூலி’க்கு செக் வைத்த இளையராஜா!

Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

23 mins ago

மத சடங்குகள் இல்லையா.? இந்து திருமணம் செல்லாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!

Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…

24 mins ago

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.! மாத தொடக்க நாளில் சரிவு.!

Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

37 mins ago

பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…

1 hour ago

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…

1 hour ago

விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.! 3 பேர் உடல் சிதறி பலி.!

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…

1 hour ago