கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் இணைந்து பல குரல்களில் பேசி நோயாளிகளை குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர்
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் இதிலிருந்து மீண்டும் வருகின்றனர். கொரோனா பாதிப்பின் அறிகுறி இருப்பினும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருப்பதும் , மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்வதும், சிலர் தப்பி செல்வதும் போன்ற விபரீதங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வரும் நோயாளிகளின் மனஅழுத்தத்தை மாற்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகரான ரோபோ சங்கரும், திண்டுக்கல் செந்திலும் இணைந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பட்டுகோட்டையில் உள்ள கொரோனாவிக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்துள்ளனர். அங்கு இருவரும் இணைந்து பல குரலில் பேசி நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்றி குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும், நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்க கூடாது என்றும் கூறியுள்ளார். தற்போது நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்றி குஷிப்படுத்திய ரோபோ சங்கரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…