நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அம்ரீந்தார் சிங் ராஜா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தற்போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசியுள்ள ராஜா, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகள் தற்கொலைகளை நடக்காது என கடந்த வருடம் அக்டோபர் மாதம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை அரவிந்த் கெஜ்ரிவால் நினைவில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இருபத்தி நான்கு நாட்களில் மட்டும் 14 தற்கொலைகள் நடந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல், விவசாயிகளுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? ஏன் இதுபோன்ற பிரச்சினையில் அமைதியாக இருக்கிறீர்கள் எனவும் அவர் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு தங்கள் வாக்குறுதியை காப்பாற்றியதாகவும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கடன்களை தள்ளுபடி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…