Former UK PM Rishi Sunak [File Image]
UK தேர்தல்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரிட்டன் பிரதமர் பதவி ஆகியவற்றில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நிறைவு பெற்று இன்று முடிவுகள் வெளியாகின. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்து விலகியுள்ளது.
அதே 14 ஆண்டுகளுக்கு பின்னர் தொழிலாளர் கட்சி பிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. புதிய பிரதமராக கீர் ஸ்டார்மன் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இங்கிலாந்தில் மொத்தமுள்ள 650 இடங்களில் 412 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், 121 இடங்களை தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தோல்விக்கு முழு பொறுப்பேற்ற கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் ரிஷி சுனக், தனது பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கு முன்பு பிரதமராக இறுதி உரையை ஆற்றினார் ரிஷி சுனக். அதில், இது ஒரு கடினமான நாள். இது உலகின் மிகச் சிறந்த நாடான பிரிட்டிஷின் மக்களுக்கு எனது முழு நன்றி என கூறினார்.
மேலும் பேசுகையில், நாட்டு மக்களுக்கு நான் முதலில் சொல்ல விரும்புவது, என்னை அனைவரும் மன்னிக்கவும். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் முழுவதுமாக செய்துவிட்டேன், ஆனால் நீங்கள் நாட்டின் அரசாங்கம் மாற வேண்டும் என்பதற்கான தெளிவான முடிவை எனக்கு சொல்லி இருக்கிறீர்கள். உங்களுடைய இந்த தீர்ப்பு முக்கியமானது. தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். இந்த முடிவைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமராக தனது இறுதி உரையில் ரிஷி சுனக் கூறினார்.
டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…
பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…
மின்தடை : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…