ரியோட் கேம்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி டிலான் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை தலைமியிடமாகக்கொண்ட ரியோட் கேம்ஸ், தனது அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக(சிஇஒ) இந்திய வம்சாவளி டிலான் ஜடேஜாவை நியமித்துள்ளது. நிக்கோலோ லாரன்ட், சிஇஒ பதவியிலிருந்து விலகியதையடுத்து தற்போது டிலான் ஜடேஜா அடுத்த சிஇஒ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக டிலான் கேமிங் நிறுவனத்தின் குளோபல் தலைவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிலான் ஜடேஜா கடந்த 2011 இல் நிறுவனத்தின் ரியோட்டில் தலைமை நிதி அதிகாரியாக (CFO) சேர்ந்தார், பின்பு 2014 இல் தலைமை இயக்க அதிகாரியாக (COO) மாறினார். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் டிலான் ஜடேஜா, சிஇஒ ஆக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.சிஇஒ
The future of Riot is in great hands. We’re proud to announce that our current global president, Dylan Jadeja, will become our next CEO later this year.
Read more: https://t.co/fUuUC6D0Oj
— Riot Games (@riotgames) May 11, 2023