எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்.. சாணம் பவுடருக்கு விரைவில் தடை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல சுகாதார நிறுவனத்தில், உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 16,000 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என கூறினார்.

தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் 15 – 20% மட்டும் உள்ளார்கள். மற்றவர்கள் எலி மருந்து, பால்டாயில் மற்றும் சாணம் பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தெரிவித்தார். விஷப் பொருட்களின் கலவை கொண்ட சாணம் பவுடர் உற்பத்தி செய்யப்படுவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அதற்கான தடை அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எலி மருந்து, பால்டாயில் போன்றவைகளை கடைகளில் பாதுகாப்பாக லாக்கரில் வைத்து விற்க வேண்டும் என்றும் வெளிப்படையாக தெரியும் வகையில் விற்கக்கூடாது எனவும் கூறினார். அதேபோல் தற்கொலைக்கு காரணங்களாக இருக்கும் எலி மருந்து, பால்டாயில் உள்ளிட்டவற்றை தனி ஒருவருக்கு வழங்கக்கூடாது என்றும் ஓரிருவர் சேர்ந்து வந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அரசாணைகளை துறை அலுவலர்கள் மூலம் விடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், 104 ஹெல்ப்லைன் இதுவரை நீட் யுஜி எழுதிய சுமார் 10,000 மாணவர்களை அணுகி அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியுள்ளது. ஆலோசகர்கள் பெற்றோர்களிடம் பேசி, தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மருத்துவ படிப்புகளை படிக்க வற்புறுத்துவதாக புகார் தெரிவித்தாக கூறினார்.

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

12 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago