டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ.ஆங்கிலப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ.ஆங்கிலப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான மஹாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’, பாமா எழுதிய சங்கதி மற்றும் கவிஞர் சுகிர்தராணி எழுதிய கைம்மாறு, என்னுடல் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.இவை பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக் பின்பாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத் துறையில் பாடப்பிரிவில் இருந்து தமிழர்கள் படைப்பு நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,ஆங்கில துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இந்த படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் இன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எழுத்தாளர் சுகிர்தராணி அவர்கள் கூறுகையில்,”டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து எனது படைப்புகள் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் பட்டியலின எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டு, உயர் வகுப்பினர் படைப்புகள் சேர்க்கப்படுகிறது. இதில் சாதிய பின்புலம் தான் இருக்கக்கூடும் என்றும், ஒரு எழுத்தாளராக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து,எழுத்துகளை அரசியல்-மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே, மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…