கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை..!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இதற்கு முதலில் கையெழுத்திட்டார்.  அதில் இம்மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  அதன்படி, தினமும் 200 பேர் என்ற அடிப்படையில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என்ற அடிப்படையில் ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கும் ரேஷன் கடை ஊழியர்களும் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு அடைந்துள்ளனர். அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.

இதனால் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் கொரோனாவால் உயிரிழந்த நியாய விலைக்கடை ஊழியர்களின் முழு விவரங்களை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

Recent Posts

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

5 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

6 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

6 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

22 mins ago

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…

48 mins ago

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

1 hour ago