மூச்சு வெளியிடுவதை வைத்தே கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை கண்டறியும் புதிய கருவியை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனம் கண்டறிந்து உள்ள நிலையில், இந்த சாதனத்தை இந்தியாவிலும் நிறுவுவதற்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வல்லுநர்களுக்கு அனுமதி தரவேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனத்தின் சார்பில் கொரோனா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை மூச்சு வெளியிடுவதை வைத்து விரைவில் கண்டறியக் கூடிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சில வினாடிகளிலேயே கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய முடியுமாம். மேலும் இந்த கருவியை வைத்து கண்டறியப்பட்ட சோதனை 95% வெற்றியடைந்து உள்ளதாம். எனவே, இந்த நிறுவனத்துடன் கடந்த ஜனவரி மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி நூற்றுக்கணக்கான கருவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனத்திடமிருந்து வாங்கி அதன் மூலம் மாதம் 73 கோடி ரூபாய் மதிப்பிலான சோதனைகளையும் செய்ய உள்ளதாம். ஏற்கனவே இந்த கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த கருவிகளை இந்தியாவில் நிறுவுவதற்கு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிப்பதற்கும் இஸ்ரேலை சேர்ந்த வல்லுனர்களுக்கு இந்தியா அனுமதி அளிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தியா வருவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலும் இவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…